சேலத்தில் இரண்டு இளம் பெண்கள் மாயம்

X
சேலம் பள்ளப்பட்டி மூன்று ரோடு மணிமுத்து காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகள் மணிமேகலை இவர் கடந்த 28ஆம் தேதி வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது பற்றி மணிமேகலின் தாத்தா பெரியசாமி பள்ளப்பட்டி போலீசில் நேற்று புகார் அளித்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பாண்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் இவரது மகள் கமலி, இவர் சங்ககிரி தனியார் கல்லூரி விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு டி ஃபார்ம் படித்து வந்தார். கடந்த 28ஆம் தேதி விடுதியில் இருந்து சொந்த ஊருக்கு செல்வதாக கூறி வெளியே சென்றுள்ளார். ஆனால் வீட்டிற்கு செல்லவில்லை இது பற்றி முருகேசன் பள்ளப்பட்டி போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

