திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் டி எஸ் எப் வாலிபால் கிளப் நடத்தும் ஐந்தாம் ஆண்டு வாலிபால் திருவிழா!

தாராபுரத்தில் டி எஸ் எப் வாலிபால் கிளப் நடத்தும் ஐந்தாம் ஆண்டு வாலிபால் திருவிழா நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் டி.எஸ்.எப் வாலிபால் கிளப் நடத்தும் ஐந்தாம் ஆண்டு வாலிபால் திருவிழா சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.தாராபுரம் பொள்ளாச்சி ரோட்டில் உள்ள மீட்டிங் ஸ்பாட் டர்பில் நடைபெற்ற இந்த வாலிபால் விளையாட்டு திருவிழாவில் தாராபுரம், திருப்பூர், பொள்ளாச்சி, சேலம் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 25 அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். அதில் வெற்றி பெற்ற திருப்பூர் வக்கீல் பிரதர்ஸ் அணிக்கு முதல் பரிசு ரூபாய் 10 ஆயிரம் மற்றும் வெற்றிக்கோப்பை தாராபுரம் சாரா நர்சிங் கல்லூரி நிறுவனர் டாக்டர் ஜெய்லானி வழங்கினார். இரண்டாம் பரிசு பெற்ற பொள்ளாச்சி ஜி .எம்.வி.சி அணிக்கு ரூ.7000,பெரிய கோப்பையும் மூன்றாம் பரிசு பெற்ற தாராபுரம் டி எஸ் எம் அணிக்கு ரூபாய் 5000,கோப்பையும் நான்காம் பரிசு பெற்ற தாராபுரம் டி எஸ். எப்அணிக்கு ரூ.3000 கோப்பையும் வழங்கப்பட்டது. போட்டியில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான கோப்பையை டாக்டர் ஜெய்லானி டி எஸ் எப் அணியின் வீரர் மோகன், ஜி எம் வி சி வீரர் கண்ணன் மற்றும் திருப்பூர் வக்கீல் பிரதர்ஸ் அணி வீரர்கள் சதீஷ், மோகன் ஆகியோருக்கு வழங்கினார். இதில் தாராபுரம் வழக்கறிஞர் பன்னீர்செல்வம், ஆசிரியர் ரத்தினசாமி,தாராபுரம் தலைமை காவலர் காளிமுத்து, டி எஸ் எப் டர்ப் மணி உட்பட ஏராளமாக கலந்து கொண்டனர். முன்னதாக நகர அரிமா சங்க மாவட்ட தலைவர் ரத்தின சபாபதி, அனிதா சந்திரசேகரன், ஆனந்த் கணேஷ், தலைமை ஆசிரியர் கார்த்திகேயன், ஸ்ரீ விக்னேஸ்வரன்,நவீன், அலங்கியம் காவல்துறை பிரபு உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர் போட்டிகள் முடிந்த பின்பு பரிசளிப்பு விழா நடைபெற்றது. அனைத்து விளையாட்டு வீரர்களும் பிரமாண்டமாக விளையாடி அனைவரையும் கவர்ந்தனர்.
Next Story