மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு

X
சங்கராபுரம் அடுத்த கல்வராயன்மலை, பாச்சேரி கிராமத்தில் பழங்குடியினர் நலத்துறை சார்பில் உள்ள துவக்க பள்ளியில் மாணவர் சேர்க்கை நிகழ்ச்சி நேற்றுநடந்தது.தலைமை ஆசிரியர் கமலநாதன் ஒலி பெருக்கி மூலம், அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து வீதி வீதியாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பள்ளி ஆசிரியர்கள் கவிதா, சகுந்தலா, ராதா, மஞ்சுளா ஆகியோர் உடன் சென்றனர்.
Next Story

