அரக்கோணம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரயில் மோதி பலி

X
மருதாலம் கிராமத்தில் அரக்கோணத்தில் இருந்து காட்பாடி செல்லும் ரயில் பாதையில் நேற்று மாலை தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி இறந்துகிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காட்பாடி ரயில்வே போலீசார் அங்கு விரைந்து வந்து வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் என விசாரிக்கின்றனர்.
Next Story

