ஆற்காட்டில் தி.மு.க. சார்பில் ரத்ததான முகாம்!

X
ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. மருத்துவர் அணி, ஆற்காடு நகர தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 72-வது பிறந்த நாளையொட்டி ஆற்காடு நகர தி.மு.க. அலுவலகத்தில் ரத்ததான முகாம் மற்றும் நலிந்தோர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் பி.என்.எஸ்.சரவணன் தலைமை வகித்தார். ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் ஏ.கே.சுந்தரமூர்த்தி, நகர அவைத்தலைவர் பி.என்.எஸ்.ராஜசேகரன், நகரமன்ற துணைத்தலைவர் பவள கொடி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர்.ஏ.வி.சரவணன் வரவேற்றார். கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு ரத்ததான முகாமை தொடங்கி வைத்து நலிந் தோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் பென்ஸ்பாண்டியன், முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் பொன்.ராஜசேகர், நகர மன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர். முகாமில் 100-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கினார்கள். முடிவில் தொகுதி மருத்துவர் அணி அமைப்பாளர் ஏ.பிரசாந்த் நன்றி கூறினார்.
Next Story

