சாரண ஆசிரியர்களுக்கான அடிப்படை பயிற்சி முகாம்
நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு சாரண மாவட்டங்களைச் சார்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க நடுநிலைப்பள்ளிகளைச் சார்ந்த குருளையர் மற்றும் சாரண இயக்கப் பொறுப்பாசிரியர்களுக்கான அடிப்படை பயிற்சி முகாம் நாமக்கல் மாவட்ட சாரண இயக்கப்பயிற்சித்திடலில் 24.02.25 முதல் 04.03.25 வரை நடைபெற்றது. மாவட்டப் பயிற்சித்திடல் செயலாக்கக் குழுமச்செயலர் க.சிதம்பரம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.துவக்க விழாவில், மாவட்ட சாரண ஆணையர்கள் பாலசுப்ரமணியம், தில்லைக்குமார், வெற்றிச்செல்வன், முனைவர். சித்ராமோகன், முனைவர்.சாரதாமணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் முதன்மை ஆணையர் ப.மகேஸ்வரி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இம்முகாமினைத் துவக்கி வைத்தார். மாவட்டக் கல்வி அலுவலர்கள் பச்சமுத்து (தொடக்கக்கல்வி) கற்பகம் (இடைநிலை)ஜோதி (தனியார் பள்ளிகள்),உதவி சாரண ஆணையர்கள் குணசேகரன்,கே.எஸ்.பழனியப்பன், பள்ளித்துணை ஆய்வாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, கை.பெரியசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 1 முதல் 4 வகுப்பு மாணவர்களுக்கான குருளையர் ஆசிரியர் அடிப்படைப் பயிற்சி முகாமில் 58 பேரும், 6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கான சாரண ஆசிரியர் அடிப்படைப் பயிற்சி முகாமில் 27 பேரும் கலந்துகொண்டனர். இம்முகாமினைத் தேசியத் தலைமையகப் பாடத்திட்டத்தின் படி சாரண ஆசிரியர் அடிப்படைப் பயிற்சி முகாம் தலைவரும் மாவட்டச் செயலருமான து.விஜய், குருளையர் ஆசிரியர் அடிப்படைப் பயிற்சி முகாம்களை பூர்ணசந்திரன் (குழு -1) செல்வம் (குழு-2) முகாம் உதவியாளர்கள் திருமலைக்குமார், இரகோத்தமன், விஜயகுமார்,இராஜசேகர் ஆகியோர் அடங்கிய குழு சிறப்பாக நடத்தியது.மாவட்டத் தலைவர் முனைவர்.குணசேகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிறைவுவிழாவில் மாவட்ட துணைத்தலைவர்கள் கிரீன்பார்க் சரவணன், மருத்துவர்.குழந்தைவேல், சிவசிதம்பரம், நாமக்கல் ரோட்டரி அமைப்பின் தலைவர் திரு.பிரபாகரன், வட்டாரக்கல்வி அலுவலர்கள் லா.பிரபுக்குமார், கெளரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆணையர்கள் முனைவர்.மு.செல்வம், முனைவர்.டி.ஓ.சிங்காரவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு முகாம் செயல்பாடுகளைப் பார்வையிட்டு சிறப்புரையாற்றினர். மாவட்டப்பொருளாளர்கள் சண்முகசுந்தரம்,திரு.இராமசந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சத்தார்பாஷா,சதீஷ்குமார்,கவிதா, சு.கோபி,வி.தீபக், சி.மணியரசன் ஆகியோர் அடங்கிய குழு முகாமிற்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தது.
Next Story



