மாற்றுத்திறனாளிகளுக்கு மின்சார வண்டியை வழங்கிய திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்
பழவேற்காடு சாட்டாங்குப்பத்தில் அதானி தனியார் துறைமுகத்தின் மூலமாக சமுதாய கூடம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மின்சார வண்டியை வழங்கிய திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர். திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் உள்ள சாட்டாங்குப்பம் மீனவ கிராமத்தில் அதானி துறைமுகத்தின் சமூக மேம்பாட்டு நிதியின் மூலமாக சுமார் 38 லட்சம் ரூபாய் செலவில் புதிய சமுதாய கூடம் கட்டித் தரப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளிகள் 15 பேருக்கு பேட்டரியால் இயங்கும் மின்சார வாகனம் கொடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு மின்சார வண்டியையும் சாட்டாங்குப்பத்தில் புதிய சமுதாய கூடத்தையும் திறந்து வைத்த ஆட்சியர் இயற்கை முறைப்படி விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு அவர்களின் விளை பொருட்களை எவ்வாறு விற்பனை செய்ய வேண்டும் என்பது குறித்தும் விளக்கம் அளித்தார்.
Next Story









