அரக்கோணம் அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் பலி!

அரக்கோணம் அடுத்த கோணலம் கிராமத்தை சேர்ந்தவர் திருப்பதி (வயது 42), விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நேத்ரா. இந்த தம்பதியருக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் 3-வது மகன் கமலேஷ் (6). அதேப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் நேற்று மாலை வீட்டின் அருகே கமலேஷ் விளையாடிக் கொண்டிருந்தபோது அருகில் இருந்த குளத்தின் பக்கம் சென்றுள்ளான். அப்போது குளத்தில் தவறிவிழுந்து மூழ்கியதாக கூறப்படுகிறது. உடனே அருகில் இருந்தவர்கள் குளத்தில் மூழ்கிய சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் சிறுவன் நீரில் மூழ்கி இறந்து விட்டான். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத் திற்கு விரைந்து வந்த அரக்கோணம் தாலுகா போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குளத்தில் மூழ்கி சிறுவன் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
Next Story

