ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி கூத்தப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது ஒகேனக்கல் காவிரி ஆறு சமீப நாட்களாக காவேரி நீர் பிடிப்பு பகுதிகளில் பொழியும் மழையின் அளவைப் பொறுத்து நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவிதமாக காணப்படுகிறது இந்த நிலையில் நேற்று மாலை வரை வினாடிக்கு 1,000 கனஅடியாக இருந்து நீர்வரத்து மார்ச் 06 இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1500 கன அடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது இதனை அடுத்து சுற்றுலா பணிகள் உற்சாகமாக அருவிகளில் குளித்தும் பரிசில் சவாரி செய்தும் மகிழ்கின்றனர். மேலும் தமிழக கர்நாடக எல்லை பகுதியினை பீலிகுண்டலுவில் தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story





