நாகர்கோவிலில் அறிவியல் உபகரண அரங்கு அடிக்கல் 

நாகர்கோவிலில் அறிவியல் உபகரண அரங்கு அடிக்கல் 
X
மேயர் நாட்டினார்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா மற்றும்  டைனோசர் பார்க் உள்ளது.      இந்த பார்க்கில் ரூபாய் 3 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் அறிவியல் பூங்கா அமைப்பதற்கு மேயர் மகேஷ் இன்று அடிக்கல் நாட்டினார். மேலும் அதிநவீன அறிவியல் கருவிகள் அடங்கிய பிளானட்டோரியம், ஏராளமான அறிவியல் உகரணங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு திடல், புல் தரை, நீர் வீழ்ச்சி, பேட்மின்டன் விளையாட்டு மைதானம் உள்பட பல அம்சங்கள் உருவாக்கப்படுகின்றன.      பொதுமக்கள், குழந்தைகளுக்கு வரும் அறிவியல் பூங்கா பயனுள்ளதாகவும், பொழுதுபோக்கிற்கும் சிறந்த பூங்காவாக விளங்கும் அதற்கான பணியை விரைந்து முடிக்கப்படும் என்று மேயர் மகேஷ்  தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி பொறியாளர் ரகுராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story