தேரோட்டம் பகுதியில் உடனுக்குடன் மின் இணைப்பு வழங்கிய மின் வாரியத்தினர்

X
Komarapalayam King 24x7 |6 March 2025 8:52 PM ISTகுமாரபாளையத்தில் தேரோட்டம் பகுதியில் மின் வாரியத்தினர் உடனுக்குடன் மின் இணைப்பு வழங்கினர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காளியம்மன் தேர்த்திருவிழா நேற்று நடந்தது. காளியம்மன் கோவில் வளாகத்தில் துவங்கிய தேரோட்டம் ராஜ வீதி சேலம் சாலை, தம்மண்ணன் சாலை, புத்தர் வீதி ஆகிய பகுதியில் நடந்தது. தேர் ஒவ்வொரு பகுதியை கடந்ததும், துண்டிக்கப்பட்ட மின் ஒயர்களை உடனுக்குடன் இணைத்து மின் இணைப்பு கொடுத்து வந்தனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
Next Story
