தேசிய பயிலரங்கம், சேர்மன் பங்கேற்பு

X
டில்லி, விஞ்ஞான் பவனில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, தேசிய பயிலரங்கம், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் சார்பில், கடந்த இரு தினங்களாக நடந்தது.இதில் பங்கேற்க, கள்ளக்குறிச்சி சேர்மன் புவனேஸ்வரி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் பயிலரங்கில், கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பெண் பிரதிநிதிகள் செயல்படும் விதம், சுயமாக முடிவுகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்டவைகள் குறித்து, பங்கேற்பாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
Next Story

