குழாய் பதிக்கும் பணிக்காக பேவர் பிளாக் கற்கள் அகற்றும் பொதுமக்கள் அவதி

X
கூடலூர் நகராட்சிக்குட்பட்ட தெருக்களில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக அப்பகுதிகளில் போடப்பட்டிருந்த பேவர் பிளாக் கற்கள் அகற்றப்பட்டன. குழாய் பதிக்கும் பணி முடிவுற்று பல நாட்கள் ஆகியும் தற்போது வரை அப்பகுதிகளில் அகற்றப்பட்ட பேவர் பிளாக் கற்கள் மீண்டும் பதிக்கப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்பவர்கள் தடுக்கி விழும் நிலை உள்ளது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Next Story

