அரசு கல்லூரியில் மகளிர் தின விழா

அரசு கல்லூரியில் மகளிர் தின விழா
X
விழா
ரிஷிவந்தியம் அரசு கல்லுாரியில் நடந்த விழாவிற்கு கல்லுாரி முதல்வர் மணிகண்டன் தலைமை தாங்கினார். பேராசிரியர் சண்முகம் முன்னிலை வகித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரி உதவி பேராசிரியர் முத்தழகி ஆகியோர் பெண்கள் மேம்பாடு, பாதுகாப்பு மற்றும் அரசு திட்டங்கள் குறித்து பேசினர். தொடர்ந்து, கலைத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள் மற்றும் சமூக நலன் சார்ந்து பணிபுரிந்த பேராசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
Next Story