பயங்கர அரிவாளுடன் புகைப்படம் வெளியிட்டவர் கைது

X
நெல்லை மாவட்டம் பேட்டை அருகே உள்ள சுத்தமல்லியை சேர்ந்தவர் சுரேஷ்(26). இவர் நேற்று கையில் பயங்கர அரிவாளுடன் இருப்பது போன்ற படத்தை சமூக வளைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இதனை கண்காணித்த போலீசார் சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story

