லாரி மோதியதில் கோவில் அர்ச்சகர் படுகாயம்

லாரி மோதியதில் கோவில் அர்ச்சகர் படுகாயம்
X
தக்கலை
குமரி மாவட்டம் பத்மநாபபுரம் கீழத்தெருவை சேர்ந்தவர் ராஜா மணி (44). இவர் கோவில் அர்ச்சகராக உள்ளார். நேற்று தனது பைக்கில் கேரளபுரம் என்ற இடத்திற்கு சென்று விட்டு வீடு  திரும்பி சென்று கொண்டிருந்தார்.       தக்கலை, மேட்டுக்கடை வரும்போது எதிரே வந்த லாரி ஒன்று ராஜாமணி ஓட்டிய பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள  தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.        இது தொடர்பான புகாரின் பேரில் லாரி டிரைவர் அதங்கோடு பகுதி சேர்ந்த பிவின் டோனி என்பவர் மீது தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story