நிதி நிறுவனத்தில் போலி நகை அடகு வைத்து மோசடி

நிதி நிறுவனத்தில் போலி நகை அடகு வைத்து மோசடி
X
களியக்காவிளை
குமரி மாவட்டம் களியக்காவிளையில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கடந்த 2022-ம வருடம் கேரள மாநிலம் பாரசாலை பகுதியை சேர்ந்த பிர்லா ஜெஸ்லின் (50) மற்றும் அவரது மகன் அனுஷ்( 21) ஆகியவர் நகைகளை அடகு வைத்து மொத்தம் ரூ 55 லட்சத்து 26 ஆயிரத்து 137 கடனாக பெற்றனர். இந்த நிலையில் அவர்கள் அடகு வைத்த நகைகளை ஆய்வு செய்த போது அவை அனைத்தும் போலியானது என்று தெரியவந்துள்ளது.      இதனை தொடர்ந்து பிர்லா ஜெஸ்லின் மற்றும் அனுஷிடம் இது குறித்து தெரிவித்து பணத்தை செலுத்தவும் அதற்கான கால வாசம் கொடுக்கப்பட்டது. அவர்கள் ரூபாய் 25 லட்சத்து 64 ஆயிரத்து 200 மட்டும் செலுத்தி உள்ளனர்.  மீதமுள்ள தொகையை செலுத்தாமல் தலைமறைவாகி   விட்டதா கூறப்படுகிறது.          அவர்களைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதை அடுத்து போலி நகைகளை வைத்து மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என கேட்டு நிதி நிறுவன  மண்டல மேலாளர் விஜி சேகர் என்பவர் நாகர்கோவில் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் செய்தார்.        புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த எஸ்பி உத்தரவிட்டார். அதன் பேரில் பிர்லா ஜெஸ்லின் உட்பட இரண்டு பேர் மீது மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story