குற்றால அருவிகளில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்

X
தென்காசி மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலா தளமான குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் நீர்வரத்து சீராக இருந்து வருகிறது. இதனால் இன்று விடுமுறை தினமான இன்று 9-ம் தேதி அதிகாலை முதலே குற்றாலம் மெயின் அருவியில் குளித்து மகிழ்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் கூட்டம் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் அருவியில் சீறி பாயும் நீரில் ஆனந்தமாய் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

