பிலிக்கல்பாளையம் ஏல சந்தையில் வெல்லம் விலை உயர்வு.

X
Paramathi Velur King 24x7 |9 March 2025 6:51 PM ISTபிலிக்கல்பாளையம் ஏல சந்தையில் வரத்து குறைந்ததால் வெல்லம் விலை உயர்வு
பரமத்திவேலூர்.மார்ச். 9: பிலிக்கல்பாளையம் விற் பனை ஏல சந்தையில் நேற்று நடைபெற்ற ஏலத் தில் வரத்து குறைந்ததால் வெல்லம் விலை உயர்ந்துள்ளது. பரமத்திவேலூர் வட்டாரத் தில்ஜேடர்பாளையம், சோழ சிராமணி, அய்யம்பாளை யம், கபிலர்மலை, பரமத்தி வேலூர், பாண்டமங்கலம், நன்செய்இடையாறு உள் ளிட்ட பகுதிகளில் ஏராள மான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. இப்பகு திகளில் விளையும் கரும்பு களை கரும்பு ஆலை உரிமை யாளர்கள் வாங்கி வந்து உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர். பின்னர் அவற்றை 308 கிலோ கொண்ட சிப்பங்களாக மூட்டைகளாக) கட்டி, பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெல்ல ஏல சந்தைக்கு கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வெல்ல ஏல சந்தையில் ஏலம் நடைபெறுகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருத்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வெல்லத்தை ஏலம் எடுத்து செல்கின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,330 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1.320 வரையிலும் ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,400 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,400 வரையிலும் ஏலம் போனது. கரும்பு டன் ஒன்று ரூ.3.700 வரை விற்பனையாகிறது. வரத்து குறைந்ததால் வெல்லம் விலை உயர்வடைந்துள்ளது. மேலும் வெல்லம் விலை உயர்வடைந்ததால் வெல்ல உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story
