பரமத்தி வேலூரில் காவல்துறை சார்பில் உலக மகளிர் தின விழிப்புணர்வு பேரணி.

பரமத்தி வேலூரில் காவல்துறை சார்பில் உலக மகளிர் தின விழிப்புணர்வு பேரணி.
X
பரமத்தி வேலூரில் காவல்துறை சார்பில் உலக மகளிர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பரமத்திவேலூர், மார்ச்.9: பரமத்தி வேலூரில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு காவல் துறையினர் சார்பில் விழிப்புணர்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. பரமத்தி வேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் சரகத்திற்கு உட்பட்ட காவல் துறை சார்பில் உலக மகளிர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ‌பழைய தேசிய நெடுஞ்சாலை மூன்று சாலை அருகே தொடங்கிய மகளிர் தின விழிப்புணர்வு ஊர்வலத்தை பரமத்தி காவல் ஆய்வாளற் இந்திராணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியை வேலூர், ஜேடர்பாளையம்,‌ பரமத்தி, நல்லூர், வேலகவுண்டம்பட்டி ஆகிய‌ 5 காவல் நிலையங்களை சேர்ந்த பெண் காவலர்கள்‌ மற்றும் பி.ஜி.பி கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். மகளிர் தின விழிப்புணர்வு பேரணி வேலூர் பழைய தேசிய நெடுஞ்சாலை மூன்று சாலையில் தொடங்கி வேலூர் பேருந்து நிலையம், பள்ளி சாலை வழியாக சென்று அங்குள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிறைவு பெற்றது. பள்ளி, கல்லூரி மாணவிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம் தொடர்பாக உடனடியாக 181 என்ற கட்டணமில்லா தொலைபேசிக்கு தகவல் தொரிவிக்கலாம். அவ்வாறு தகவல் கொடுத்தால் தாங்கள் குறிப்பிட்ட இடத்திற்கு உடனடியாக காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அவர்களை சிறையில் அடைக்கப்படுவார். பெண்கள் குழந்தைகள், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. சிறுமிகள், மாணவிகள், பெண்களுக்கு பாலியல் பிரச்சனை உள்ள பகுதிகளில் போலீசார் மாறுவேடத்தில் நிறுத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர். எனவே பெண்கள் அச்சமின்றி நடமாடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெண்கள், மாணவிகள், சிறுமிகள், எந்த வகையிலும் பாதிக்காத வகையில் காவல்துறை துணை நிற்கும் என பொதுமக்களிடையே கோஷங்களை எழுப்பியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் பரமத்தி காவல் உதவி ஆய்வாளர் ராதா, சரண்யா, பி.ஜி.பி கல்வி நிறுவனங்களின் தாளாளர் கணபதி,, கல்லூரியின் முதன்மையர் முனைவர் பெரியசாமி மற்றும் மாணவிகள், பரமத்தி வேலூர் காவல் கண்காணிப்பாளர் சரகத்திற்கு உட்கோட்ட காவல் நிலையங்களை சேர்ந்த பெண் காவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story