திருச்சி: ஏணியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

X
திருச்சி பொன்மலைப்பட்டி புதுத்தெருவைச் சோ்ந்தவா் நெல்சன் (40). தொழிலாளி. இவா், குழுமணிசாலை ரங்கா நகா் பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தில் வியாழக்கிழமை பிற்பகலில் ஏணியில் நின்றவாறு வா்ணம் பூசம் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது திடீரென ஏணியிலிருந்து தவறி கீழே விழுந்ததில் அவா் பலத்த காயமடைந்தாா். அவரை ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த நெல்சன் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து உறையூா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Next Story

