கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு, ஆண்டுதோறும் ரஷ்யா, ஈரான், ஈராக், பாகிஸ்தான், இலங்கை, சைபிரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து பூநாரை, செங்கால் நாரை, வரி தலைவாத்து, ஊசிவால் சிரவி உட்பட 40-க்கும் மேற்பட்ட உள்ளான் வகை பறவைகள், கடல் ஆலா, கடல் காகம் உள்ளிட்ட 294 வகையான பறவைகள் வந்து செல்கின்றன. இந்த ஆண்டு பறவைகள் சரணலாயத்திற்கு லட்சக்கணக்கான பறவைகள் வந்து குவிந்துள்ளது. இந்நிலையில், நீர் பறவைகளை கணக்கெடுக்கும் பணி கடந்த 8- ந் தேதி தொடங்கி 9 -ந் தேதி வரை நடைபெற்றது. பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர், கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் என 60 பேர் 12 வழி தடத்தில், 12 குழுக்களாக பிரிக்கப்பட்டு, பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பறவைகள் கணக்கெடுப்பில,வெளிநாடுகளில் இருந்து என்னென்ன பறவைகள், எத்தனை வகையான பறவைகள் வந்துள்ளது என்பது தெரிய வரும் என கோடியக்கரை வனச்சரகர் ஜோசப் டேனியல் தெரிவித்தார்.
Next Story

