காவிரி ஆற்றில் மூழ்கி மாணவி உயிரிழப்பு

X
தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே மோட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனி,இவருடைய மகள் மேனிகா (வயது 16). இவர், கிருஷ்ணாபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் உறவினர் ஒருவர் இறந்த சடங்கு நிகழ்ச்சிக்காக பெற்றோருடன் மாணவி நேற்று ஒகேனக்கல்லுக்கு வந்தார். ஓகேனக்கல்லில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த பின்னர் அவர்கள் ஊட்டமலை பரிசல்துறை பகுதியில் காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர்.அப்போது மாணவி ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென் றபோது ஆற்றின் சுழலில் சிக்கி மூழ்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவியை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற் குள் தண்ணீரில் மாணவி மேனிகா மூழ்கினார். இந்த சம்பவம் குறித்து,ஓகேனக்கல் காவலர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் காவிரி ஆற்றில் மூழ்கிய மாணவிமேனிகாவின் உடலை மீட்டனர். இதைப் பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். இதுகுறித்து ஒகேனக்கல் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவிரி ஆற்றில் மூழ்கி பிளஸ்-2 மாணவி இறந்த சம்பவம் மோட்டுப் பட்டியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story

