கூடலூரில் புகையிலை பொருட்களை பதுக்கிய தாய் , மகள் கைது

X
கூடலூர் தெற்கு காவல் நிலைய போலீசார் நேற்று (மார்ச் .9) புகையிலை தடுப்பு சம்பந்தமாக ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள நந்தினி என்பவரது பெட்டிக்கடையில் போலீசார் சோதனை மேற்கொண்ட பொழுது அங்கு 5.750 கி.கிராம் புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் நந்தினி அவரது தாயார் பூங்கொடி மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
Next Story

