பரமத்தி வேலூர் நாட்டு கோழி சந்தையில் நாட்டுக்கோழிகளின் விலை உயர்வு.

X
Paramathi Velur King 24x7 |10 March 2025 8:27 PM ISTபரமத்தி வேலூர் நாட்டு கோழி சந்தையில் நாட்டுக்கோழிகளின் விலை உயர்ந்தும், ஆட்டிறைச்சி மற்றும் மீன்களின் விற்பனை அதகரித்தும் காணப்பட்டது. .
பரமத்திவேலூர், மார்ச்.10: பரமத்தி வேலூரில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நாட்டுக்கோழி சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு பரமத்தி வேலூர், மோகனூர், கரூர், பாளையம் நாமக்கல்,ஜேடர்பாளையம், சோழசிராமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நாட்டுக் கோழிகளை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கொண்டு வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தைக்கு பெருவடை, கீரி, கடகநாத், அசில்,மயில் காகம்,கருங்கண் கருங்கால்,கிரிராஜா உள்ளிட்ட பல்வேறு வகையான சண்டை கோழிகள், நாட்டுக்கோழிகள் மற்றும் வளர்ப்ப நாட்டுக்கோழிகளையும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கொண்டு வந்திருந்தனர். இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும் நாட்டுக் கோழிகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்து நாட்டுக் கோழிகளை வாங்கிச் செல்கின்றனர். தரமான நாட்டுக் கோழிகள் கடந்த வாரம் கிலோ ஒன்று ரூ.550 வரையிலும், பண்ணை நாட்டுக் கோழிகள் கிலோ ரூ.280 வரையிலும் விற்பனையானது. நேற்று ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கோழிகள் கிலோவிற்கு ரூ.620 வரை விலை உயர்ந்து விற்பனையானது. பண்ணை நாட்டுக்கோழிகள் ரூ.300 முதல் ரூ.350 வரையிலும் விற்பனையானது. சண்டைக்கோழிகள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை விற்பனையானது. ஞாயிற்றுக்கிழமை இரவு பரமத்தி வேலூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற நன்செய் இடையாறு குண்டம் திருவிழா காப்பு கட்டுவதை முன்னிட்டு கோழிகள்,ஆட்டிரைச்சி மற்றும் மீன்கனின் விலை உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
Next Story
