சேலம் அருகே ரெயிலில் அடிபட்டு ஒருவர் பலி

X
சேலம் ஜங்ஷன்- வீரபாண்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே 50 வயதுடைய ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். தகவல் கிடைத்ததும் சேலம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story

