சேலம் அருகே ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி

X
சேலம் கிச்சிப்பாளையம் கருணா நகரை சேர்ந்தவர் ராஜா (வயது 62), மூட்டை தூக்கும் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் எருமாபாளையம் பகுதியில் உள்ள குருவிபனை ஏரிக்கு குளிக்க சென்றார். அங்கு அவர் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி பலியானார். தகவல் கிடைத்ததும் செவ்வாய்பேட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் ராஜாவின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவரது உடலை கிச்சிப்பாளையம் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story

