தண்ணீர் என நினைத்து பினாயிலை குடித்த மூதாட்டி சாவு

X
சேலம் குகை பென்சன் லைன் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி காந்திமதி (வயது 63). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 6-ந் தேதி வீட்டில் இருந்த போது காந்திமதி தண்ணீர் என நினைத்து பினாயிலை குடித்து மயங்கி விழுந்தார். இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

