மழைநீர் கால்வாய் துார்வாரும் பணி தீவிரம்

மழைநீர் கால்வாய் துார்வாரும் பணி தீவிரம்
X
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழைநீர் கால்வாய் துார்வாரும் பணி துவக்கப்பட்டு, தீவிரமாக நடந்து வருகிறது.
காஞ்சிபுரம் ஒன்றியம், கீழம்பி மற்றும் சிறுகாவேரிபாக்கத்தில் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் மழைநீர் செல்லும் கால்வாய், ஜெ.ஜெ., நகர் வழியாக செல்கிறது. முறையான பராமரிப்பு இல்லாததால், கால்வாயில் செடி, கொடிகள் வளர்ந்தும், மண் திட்டுகளால் துார்ந்த நிலையில் உள்ள இக்கால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, காஞ்சிபுரம் வட்டார ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்கள் வாயிலாக, 2 கி.மீ., நீளத்திற்கு மழைநீர் கால்வாய் துார்வாரும் பணி துவக்கப்பட்டு, தீவிரமாக நடந்து வருகிறது.
Next Story