திமுக அரசை கண்டித்து விசிகவினர் போராட்டம்

கட்சியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டி அடுத்த கரடி புத்தூர் மக்களுக்கு ஆதரவாக பொன்னேரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு
ஆளும் திமுக அரசுக்கு எதிராக கூட்டணி கட்சியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டி அடுத்த கரடி புத்தூர் மக்களுக்கு ஆதரவாக பொன்னேரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு. முதலாளிகளுக்கு துணை போகும் தமிழக அரசின் மீது நம்பிக்கை இல்லை என பகிரங்கமாக குற்றச்சாட்டு. திருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டி அடுத்த கரடி புத்தூர் கிராமத்தில் சர்வே எண் 51/1-ல் அடங்கிய கல்லாங்குத்து அரசின் இடத்தில் செயல்படும் மண்குவாரியின் உரிமையை ரத்து செய்ய வலியுறுத்தியும், கரடி புத்தூர் கல்லாங்குத்து அரசு நிலத்தை கிராம பூர்வ குடி மக்களுக்கு வீட்டுமனையாக பிரித்து பட்டா வழங்க கோரியும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வருவாய் மற்றும் காவல் துறையினர் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு அப்பகுதி மண் எடுக்கும் முதலாளிகளுக்கு ஆதரவாக நின்று வருகின்றனர். மேலும் போராட்டம் நடத்திய அப்பகுதி தலீத் பெண்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்கள் மீது வழக்குகளை பதிவு செய்தனர். இதற்கு பல்வேறு அமைப்புகள் கட்சியினர் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த பிரச்சனைக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பொன்னேரியில் உள்ள அம்பேத்கர் சிலை எதிரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் தமிழக அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர். கரடிப்புத்தூர் கிராம மக்களுக்கு பட்டா வழங்க கோரியும், அவர்களுக்கு சொந்தமான நிலத்தில் மண் அள்ளும் திட்டத்தை கைவிட கோரியும் போராட்டம் நடத்திய பெண்கள் மீது பதிந்துள்ள வழக்குகளை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தலித் மக்களுக்கு எதிராகவும் முதலாளிகளுக்கு ஆதரவாகவும் செயல்படும் தமிழக அரசை வன்மையாக கண்டிப்பதாகவும் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் தமிழக அரசின் மீது நம்பிக்கை இழந்துள்ளதாகவும் பிரச்சனைக்கு தீர்வு காணாத பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டங்களில் தமிழக அரசுக்கு எதிராக திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கப்படும் எனவும் எச்சரிக்கை விட்டுள்ளனர். திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரே திமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருவது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story