சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளியிடம் பணம் திருடியவர் கைது

X
சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியை சேர்ந்தவர் சசிகாந்தன் (வயது 46), கட்டிட தொழிலாளி. சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட இவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக இருந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் நேற்று அதிகாலை வார்டில் அவர் வைத்திருந்த ரூ.3 ஆயிரம் திருட்டு போனது. இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சசிகாந்தன் பணத்தை திருடியது தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்த ஜமீல் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story

