பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற அமைச்சர்.
மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட மதுரை கல்லூரி மைதானத்தில் இன்று (மார்ச்.12) நடைபெற்ற அரசின் நலத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாமை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தொடங்கி வைத்து, பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன்,மதுரை வருவாய் கோட்டாட்சியர் சாலினி, மத்திய மண்டலத்தலைவர் பாண்டிச்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story




