திருவட்டார் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல்

X
குமரி மாவட்டம் புத்தன்கடை பகுதியை சேர்ந்தவர் ஜோபிஷா (32). இவரது கணவர் கிளிட்டஸ். அதே பகுதியை சேர்ந்தவர் ரெதீஷ் (40). இவர்கள் இரண்டு பேரும் உறவினர்கள் ஆவார்கள். சொத்து தகராறு தொடர்பாக ஏற்கனவே ரெண்டு பேருமே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று ரெதீஷ் ஜோபிஷாவின் வீட்டு சுற்று சுவரை உடைத்து தகராறு செய்து அவருக்கு மிரட்டல் கொடுத்துள்ளார். இது குறித்து ஜோபிஷா திருவட்டாறு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரெதிஷை கைது செய்தனர்.
Next Story

