டாஸ்மாக் கடை திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் கல்லை வைத்து மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது..*

X

டாஸ்மாக் கடை திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் கல்லை வைத்து மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது..*
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே டாஸ்மாக் கடை திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் கல்லை வைத்து மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாபட்டி அம்பேத்கர் தெரு பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டில் செயல்பட்டு வந்த டாஸ்மார்க் கடை கொரோனா காலகட்டத்தில் மூடப்பட்டது. கொரோனா காலங்கள் முடிவடைந்த பின்பு டாஸ்மாக் கடையை இரண்டு முறை திறக்க அதிகாரிகள் முன்வந்த போது அப்பகுதி பொதுமக்கள் குடியிருப்பு பகுதிக்குள் டாஸ்மாக் கடையை திறக்க விடாமல் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர் இதனால் தற்போது வரை டாஸ்மாக் கடை திறக்கப்படாமல் இருந்தது இந்நிலையில் டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க உள்ளதாக தகவல் வந்ததை அடுத்து அப்பகுதி பொதுமக்கள் சாலையில் கல்லை மறித்து ஆண்கள் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது வாக்குவாதம் ஏற்பட்டது ஸ்டாலின் ஆட்சியில் திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் படிப்படியாக மதுபான கடைகளை குறைக்கப்படும் என தெரிவித்த போது கூமாபட்டி அம்பேத்கர் தெரு பகுதியில் மீண்டும் டாஸ்மாக் கடை திறக்கப்படுவது சரிதானா என்று கேள்வி எழுப்பினர். இந்நிலையில் போராட்டக்காரர்களிடம் சாலையில் வைக்கப்பட்ட கல்லை அகற்றுமாறு தெரிவித்த காவல்துறையினர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 10க்கும் மேற்பட்ட ஆண்களை கைது செய்தனர். மேலும் போராட்டக்காரர்கள் அரசு மதுபான கடை திறக்காமல் இருப்பதற்கு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக சென்றுள்ளனர்.அரசு மதுபான கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மேலும் அசம்பாத விதங்களை தவிர்ப்பதற்காக 20 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story