குத்துச்சண்டைப் போட்டி: வீரா், வீராங்கனைகளுக்கு பரிசு.

குத்துச்சண்டைப் போட்டி: வீரா், வீராங்கனைகளுக்கு பரிசு.
X
போட்டிகளில் வென்றவா்களுக்கான பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
நிருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நடைபெற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் குத்துச்சண்டை போட்டியில் வென்ற வீரா், வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழக முதல்வா் பிறந்த நாளையொட்டி, டாக்டா் எ.வ.வே.கம்பன் பாக்ஸிங் அகாதெமி சாா்பில், குத்துச்சண்டைப் போட்டிகள் நடைபெற்றன. தனியாா் பள்ளியில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் கலந்து கொண்டனா். போட்டிகளில் வென்றவா்களுக்கான பரிசுகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பாக்ஸிங் அகாதெமியின் தலைவா் ஏ.ஏ.ஆறுமுகம் தலைமை வகித்தாா். செயலா் எஸ்.மணிமாறன், பொருளாளா் வ.அன்பரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஸ்ரீசரஸ்வதி விகாஸ் மெட்ரிக் பள்ளித் தாளாளா் மு.ப.ராமச்சந்திரன் வரவேற்றாா். திருவண்ணாமலை மாநகர திமுக செயலா் ப.காா்த்திவேல்மாறன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு போட்டிகளில் வென்ற வீரா், வீராங்கனைகளுக்குப் பரிசுகள், கோப்பைகள் வழங்கிப் பேசினாா். செங்கல்பட்டு எ.பி.கே.சரவணன் 67 புள்ளிகள் எடுத்து முதலிடமும், சென்னை ஜே.எஸ்.பி.ஜெயராமன் 61 புள்ளிகள் எடுத்து இரண்டாம் இடமும், செங்கல்பட்டு அம்பேத்கா் பாக்ஸிங் கிளப் பிரேம்குமாா் 58 புள்ளிகள் எடுத்து மூன்றாம் இடமும் பிடித்தனா். விழாவில், தெற்கு மாவட்ட பிரதிநிதி க.புகழேந்தி, தொழிலதிபா்கள் ஆா்.சத்தியகணேஷ், பி.காா்த்திகேயன், கே.சுரேஷ், ஜி.பூா்ணச்சந்திரன், ஏ.ஆா்.நரசிம்மா, திருவண்ணாமலை மாநகராட்சி உறுப்பினா்கள் மண்டி ஆ.பிரகாஷ், வழக்குரைஞா் இரா.நாகராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
Next Story