வேடசந்தூரில் சமுதாய வளைகாப்பு விழா எம்எல்ஏ பங்கேற்பு

வேடசந்தூரில் சமுதாய வளைகாப்பு விழா எம்எல்ஏ பங்கேற்பு
X
வேடசந்தூரில் சமுதாய வளைகாப்பு விழா எம்எல்ஏ காந்திராஜன் பங்கேற்பு
வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமுதாய வளைகாப்பு விழா மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வேடசந்தூர் எம்எல்ஏ காந்தி ராஜன் தலைமை வகித்து கர்ப்பிணி பெண்கள் 100 பேருக்கு சீர்வரிசை கொடுத்து 25 பேருக்கு தாலிக்கு தங்கம் கொடுத்து தனது சொந்த செலவில் கர்ப்பிணி பெண்களுக்கும் அங்கன்வாடி பணியாளர்களுக்கும் சேலை கொடுத்து கௌரவித்தார். இந்நிகழ்ச்சியில் வேடசந்தூர் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் கவிதா பார்த்திபன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சௌடீஸ்வரி கோவிந்தன், வேடசந்தூர் பேரூர் செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் கவிதா முருகன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் மருதபிள்ளை, மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு அமைப்பாளர் காட்டுபாவா சேட், மாநில பொதுக்குழு உறுப்பினர் பூபதி மாரிமுத்து, தெற்கு ஒன்றிய பொருளாளர் நாகப்பன், வடக்கு ஒன்றிய பொருளாளர் அய்யாவு, மாவட்ட பிரதிநிதி முத்துகிருஷ்ணன், மாநில தலைமைக் கழக பேச்சாளர் முருகவேல், வேடசந்தூர் எம்எல்ஏ உதவியாளர்கள் பூவரசன் மற்றும் மனோஜ் குமார், தென்னம்பட்டி இளங்கோ, மாவட்ட அய்யலக அணி துணை அமைப்பாளர் மணிமாறன், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story