துலுக்காணத்தம்மன் கோவில் அஷ்டபந்தன மாகா கும்பாபிஷேகம்

200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ துலுக்காணத்தம்மன் கோவில் அஷ்டபந்தன மாகா கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆரணி அருகே 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ துலுக்காணத்தம்மன் கோவில் அஷ்டபந்தன மாகா கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அடுத்த போந்தவாக்கம் கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதையான துலுக்காணத்தம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்த 10 ஆம் தேதி கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.தொடர்ந்து லக்ஷ்மி ஹோமம், நவகிரஹ ஹோமம்,கோ பூஜை,யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து வாஸ்து சாந்தி,இரண்டாம் கால யாக பூஜை, மருந்து சாற்றுதல்,விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால யாக பூஜை,யாத்ராதானம்,மகா பூர்ணாஹூதி,கலசங்கள புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான இன்று சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் மேளதாளங்கள் முழங்க ராஜகோபுரத்தின் மீதுள்ள கலசங்களுக்கும்,விமான கோபுரங்கள் மீது ஊற்றி அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழாவை சிறப்பாக நடத்தி வைத்தனர். பின்னர் அங்கு கூடியிருந்த பெருந்திரளான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.பின்னர் மூலவருக்கு பால்,தயிர்,சந்தனம், இளநீர்,ஜவ்வாது,தேன்,உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களாலும்,திரு ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
Next Story