ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மாசி மாத பௌர்ணமி பூஜை

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மாசி மாத பௌர்ணமி பூஜை
X
மாசி மாத பெளர்ணமியையொட்டி அம்மனுக்கு, பால், தயிர்,பன்னீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், உள்ளிட்ட வாசனைதிரவியங்களால் அபிஷேகம்செய்துஸ்ரீமுத்துமாரியம்மனை வன்ன மலர்கள், எலுமிச்சை மாலைகளால்அலங்கரித்துசிறப்பு பூஜைகளுடன் மஹாதீபாராதனை
பெரம்பலூர் சங்குபேட்டையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மாசி மாத பௌர்ணமி தினத்தையொட்டி சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பெரம்பலூர் நகரம் சங்குபேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் இத்திருக்கோயிலில் மாசி மாத பெளர்ணமியையொட்டி அம்மனுக்கு, பால், தயிர்,பன்னீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து ஸ்ரீ முத்துமாரியம்மனை வன்ன மலர்கள், எலுமிச்சை மாலைகளால் அலங்கரித்து சிறப்பு பூஜைகளுடன் மஹா தீபாராதனைகளும், சிறப்பு பூஜைகள் செய்து அம்மனை திரளான பக்தர்கள் மாலை போட்டு வழிபட்டனர் .இந்நிகழ்ச்சியை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பூசாரி வெ.நீதிதேவன், ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்தனர். மாசி மாத விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பெரம்பலூர் சங்குபேட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் வேண்டிய வரங்கள் தரும், என பக்தர்கள் கூறுகிறார்கள்.
Next Story