வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

X

களியக்காவிளை
குமரி மாவட்டம் மீனச்சல் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் (47). மர வேலை செய்து வந்துள்ளார். இவரது மனைவி இரண்டு மாதம் முன்பு இறந்து போனார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. நேற்று 12ஆம் தேதி காலை 11 மணிக்கு அந்த பகுதியில் உள்ள செல்வராஜ் என்பவர் வீட்டில் முதல் மாடியில் ஸ்டீபன் ஜன்னல் கண்ணாடி மாட்டும் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது அவரது தலை மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனை கொண்டு சென்று முதலுதவி அளித்துவிட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை மருத்துவர் பரிசோதித்த போது ஸ்டீபன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து அவரது தம்பி சதீஷ் 32 என்பவர் களியக்காவிளை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story