வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பு மீட்ட தீயணைப்பு துறையினர்

X
அரகண்டநல்லூர், காமராஜர் வீதியில் வசிப்பவர் மல்லிகா, 45; நேற்று வீட்டுக்குள் பாம்பு புகுந்ததை கண்டு அலறி அடித்துக் கொண்டு வெளியில் ஓடி வந்தார். இது குறித்து திருக்கோவிலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் நாகேஸ்வர்ராவ் தலைமையிலான மீட்பு குழுவினர் விரைந்து சென்று, வீட்டுக்குள் பதுங்கிய நல்ல பாம்பை லாவகமாக பிடித்து அத்திப்பாக்கம் காப்பு காட்டில் விட்டனர்.
Next Story

