அரிசி கடைக்காரர் மீது போக்சோ வழக்கு

அரிசி கடைக்காரர் மீது போக்சோ வழக்கு
X
மதுரை அருகே சிறுமியிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தை சேர்ந்த செல்லப்பாண்டி (31) என்பவர் அரிசிக் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் (மார்ச்.12)இரவு சோழவந்தான் அருகே உள்ள ஒரு வாடிக்கையாளர் வீட்டிற்கு அரிசி மூடை இறக்க சென்ற போது அங்கு வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமி கூச்சலிடவே தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து சமயநல்லுார் மகளிர் போலீசார் செல்லபாண்டி மீது போக்சோ வழக்குப் பதிவுசெய்து தேடி வருகின்றனர்.
Next Story