ஊராட்சி செயலாளரை தாக்கியவர்கள் மீது வழக்கு

ஊராட்சி செயலாளரை தாக்கியவர்கள் மீது வழக்கு
X
மதுரை உசிலம்பட்டியில் ஊராட்சி செயலாளரை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை மல்லப்புரம் ஊராட்சி செயலர் சின்னச்சாமி, (32) என்பவர் நேற்று காலையில் அலுவலகத்தில் இருந்த போது அதே ஊரைச் சேர்ந்த தமிழரசன் 42, என்பவர் தான் சொல்பவர்களுக்குத்தான் வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மிரட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து எம்.கல்லுப்பட்டி போலீசில் ஊராட்சி செயலர் புகார் அளித்தார் .போலீசார் தமிழரசனைக் கைது செய்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து சேடபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலர்களிடம் இத்தகவல் தெரிவித்த விட்டு சின்னச்சாமி மல்லப்புரத்திற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை அவரை வழிமறித்த தமிழரசனின் உறவினர்களான ராஜேஷ்குமார், அஜித் ஆகியோர் தமிழரசன் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெறவேண்டும் என கூறி கட்டையால் தாக்கியுள்ளனர். அவரை கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த அவரை போலீசார் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். போலீசார் ராஜேஷ்குமார், அஜித் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story