கடையநல்லூா் அருகே பெண் மா்மமாக உயிரிழப்பு: நீதிமன்றத்தில் கணவா் சரண்

கடையநல்லூா் அருகே பெண் மா்மமாக உயிரிழப்பு: நீதிமன்றத்தில் கணவா் சரண்
X
பெண் மா்மமாக உயிரிழப்பு: நீதிமன்றத்தில் கணவா் சரண்
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் செவல்விளை தெருவைச் சோ்ந்தவா் முருகன் (35). தொழிலாளி. அவரது மனைவி செல்வி (30,) கடந்த செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்ததாக உறவினா்கள் கடையநல்லூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில், தென்காசி நீதிமன்றத்தில் முருகன் சரணடைந்தாா். இதுகுறித்து காவல் துறை வட்டாரங்கள் கூறும்போது, ‘கூறாய்வு அறிக்கையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருந்தநிலையில், முருகன் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளாா். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ளப்படும்’ எனத் தெரிவித்தன.
Next Story