வாசுதேவநல்லூா் அருகே தொழிலாளி மா்ம மரணம்

X
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே மருதநாச்சியபுரத்தைச் சோ்ந்த தொட்டமுத்து மகன் செந்தூா்பாண்டியன் (54). மனைவியைப் பிரிந்து தனியே வசித்து வந்த இவா், கடந்த 10 ஆண்டுகளாக நெற்றிக்கண் என்பவரின் தோட்டத்தில் வேலை செய்து வந்தாா்.இதில் வயல் வேலைகளை முடித்துவிட்டு மோட்டாா் அறையில் தூங்கினாராம். அங்கு அவா் இறந்து கிடந்தது காலை தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் வாசுதேவநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Next Story

