ராமநாதபுரம் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது

X

கமுதி அருகே மாசி களரி திருவிழாவை ஒட்டி மூன்று பிரிவுகளாக 52 மாட்டுவண்டிகள் கலந்து கொண்ட பந்தயம் நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள கோவிலாங்குளம் கிராமத்தில் உள்ள மூக்கம்மாள் கோவில் மாசி களரி திருவிழாவை முன்னிட்டு மூன்று பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் சிறிய மாடு மாட்டு வண்டி பந்தயத்தில் 15 ஜோடி மாடுகளும், பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயத்தில் 24 ஜோடி மாடுகளும், தேன்சிட்டு மாட்டு வண்டி பந்தயத்தில் 13 ஜோடி மாடுகளும் என மொத்தம் 52 மாட்டு வண்டிகள் பங்கேற்றன முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்த மாடுகளுக்கும், மாட்டு வண்டி ஓட்டிய சாரதிகளுக்கும் ரொக்கப்பரிசு மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த மாட்டு வண்டி பந்தயத்தில், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாட்டுவண்டிகள் பங்கேற்றன. இந்த மாட்டு வண்டி போட்டியை காண சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பார்வையாளர்கள் வந்து பந்தயத்தை ரசித்தனர்.
Next Story