கடன் தொல்லை திருட்டு முயற்சி மெடிக்கல் ரெப் கைது

பூந்தமல்லி அருகே வளசரவாக்கம் பிருந்தாவன் நகர் பிரதான சாலை பகுதியை சேர்ந்தவர் மணி @ ரேவதி (65) இவர் சென்னை மெட்ராஸ் செவிலியர் கல்லூரி பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்று தனது மகள், மருமகன் என குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மணி வீட்டில் பெண்மணி தனியாக இருந்தபோது அங்கு வந்த நபர் ஆன்லைனில் மருந்துகள் ஆர்டர் செய்தது வந்துள்ளதாக கூறியுள்ளார் அதனையடுத்து தனது மகள் ஆர்டர் செய்திருப்பார் என நினைத்து அவரை உள்ளே அழைத்து மருந்தை கேட்டுள்ளார் அப்போது பையில் இருந்து கத்தியை எடுத்து மணியின் கையில் குத்திவிட்டு பணம் மற்றும் நகையை கேட்டு மர்ம நபர் மிரட்டி உள்ளார். இதனை கண்ட அவரது வீட்டின் பணி புரியும் வேலைக்கார பெண் திருடன் , திருடன் என கூச்சலிடவே அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். பின்னா் இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சம்பவம் குறித்து அந்தப் பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆராய்ந்து விசாரணை செய்த போலீசார் வீட்டில் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர் ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த மெடிக்கல் ரெப் நாகமுத்து (41)என்பவது தெரியவந்தது அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். ஆன்லைனில் மருந்து டெலிவரி செய்வது போல வந்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தியால் தாக்கி பணம் மற்றும் நகை பறிக்க முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்ப் படுத்தியுள்ளது. மேலும் நாகமுத்திடும் விசாரணை செய்தபோது தான் மெடிக்கல் தொழில் செய்வதால் வளசரவாக்கம் பகுதிகளில் அதிகம் சுற்றி வர வாய்ப்பு கிடைப்பதாலும் குறிப்பாக பூட்டி இருக்கும் வீடுகள் பற்றி தெரியும் எனவும் இதன் அருகே மருத்துவமனை உள்ள நிலையில் அடிக்கடி அங்கு மருத்துவரை மருந்துகள் விற்பனை தொடர்பாக சந்திக்க வருவேன் எனவும் அப்படி வரும்போது அருகே உள்ள இந்த வீடு பூட்டி இருக்கும் எனவும் இந்த நிலையில் மெடிக்கல் ரெப் தொழிலில் போதிய வருமானம் வரவில்லை கடன் தொல்லை அதிகம் இருந்த காரணத்தால் வேற வழியின்றி திருட்டு முயற்சியில் ஈடுபட்டதாகவும் அப்படி ஈடுபட்டபோது தப்பி சென்ற நிலையில் போலீசாரிடம் சிக்கிக் கொண்டதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது..
Next Story

