வங்கிக் கடனை திருப்பி செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொண்ட திமுக கிளைச் செயலாளர்

வங்கிக் கடனை திருப்பி செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொண்ட திமுக கிளைச் செயலாளர்
X
வங்கியில் வாங்கிய விவசாய கடனை திருப்பி செலுத்த முடியாமல் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட திமுக கிளை கழக செயலாளர்
திருவள்ளூர் மீஞ்சூர் அருகே வங்கியில் வாங்கிய விவசாய கடனை திருப்பி செலுத்த முடியாமல் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட திமுக கிளை கழக செயலாளர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த வேலூர் ஊராட்சியில் வசித்து வருபவர் முத்துராஜ் வயது 65 மனைவியின் பெயர் சுசீலா வயது 45. இவர்களுக்கு நான்கு மகன்கள் ஒரு பெண் பிள்ளை இருக்கின்றனர். முத்துராஜ் திமுக கழகத்தின் வேலூர் ஊராட்சியில் கிளை கழக செயலாளராக இருக்கிறார். மேலும் முத்துராஜ் ஒரு விவசாயி சொந்தமாக நான்கு ஏக்கரா நிலம் இருந்தும் அதில் விவசாயம் செய்ய இயலாது. காரணம் தண்ணீர் வசதி இல்லை. இந்த நிலையில் பொன்னேரிக்கு அருகே உள்ள கூடுவாஞ்சேரி என்ற ஊரில் ஆறு ஏக்கர் நிலத்தை குத்தகை எடுத்து அதில் விவசாயம் செய்து வந்தார். மேலும் விவசாயத்திற்காக வங்கியில் 5 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாக தெரிகிறது. அது மட்டுமல்லாது குத்தகை எடுத்த நிலத்தில் கடந்த முறை நெற்பயிர் பயிரிட்டுள்ளார் அது மழையின் காரணமாக நீரில் மூழ்கியதால் முழுவதும் நஷ்டம் ஏற்பட்டடுள்ளது தற்பொழுது அதில் தர்பூசணி பழத்தை பயிரிட்டு வளர்த்து வரும் நிலையில் கடனை திருப்பி செலுத்த முடியாமல் மிகுந்த சிரமம் அடைந்துள்ளார். அது மட்டுமல்லாது வங்கியை சேர்ந்தவர்கள் இவரை தொந்தரவு செய்ததால் கடந்த ஒரு வாரமாக மன உளைச்சலில் இருந்ததாகவும் நேற்று இரவு 12 மணி அளவில் வீட்டில் உள்ள குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அதை பார்த்த அவரின் மனைவி சுசிலா மற்றும் மகன்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட முத்துராஜன் உடலை கைப்பற்றிய நிலையில். இந்த சம்பவம் போலீசாருக்கு தெரிந்ததால் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கியில் வாங்கிய விவசாய கடனுக்காக ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டது கடந்த காலங்களில் கொஞ்சம் குறைந்து இருந்த நிலையில் தற்பொழுது மீண்டும் ஒரு விவசாயி கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டது இந்த பகுதியில் மனவருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story