சங்கரன்கோவில் அருகே ஆண் சடலம் மீட்பு

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சோ்ந்தமரம் சாலையில் உள்ள குடியிருப்புப் பகுதி அருகே ஆண் சடலம் கிடப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், நகர காவல் நிலைய போலீஸாா் சென்று, சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். விசாரணையில் அந்த நபா் அருகேயுள்ள தளவாய்புரத்தைச் சோ்ந்த கருப்பசாமி (45) எனத் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Next Story

