அ.தி.மு.க., துண்டு பிரசுரம் விநியோகம்

அ.தி.மு.க., துண்டு பிரசுரம் விநியோகம்
X
விநியோகம்
மணலுார்பேட்டை பேரூராட்சியில் அ.தி.மு.க., ஜெ., பேரவை சார்பில் திண்ணைப் பிரசாரம், துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அ.தி.மு.க., அரசின் சாதனைகள், நிகழ் கால தி.மு.க., அரசின் அவலங்களை விளக்கும் வகையில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஜெ., பேரவை செயலாளர் ஞானவேல் தலைமை தாங்கினார். செந்தில்குமார் எம்.எல்.ஏ., பேரவை இணைச் செயலாளர் பிரபு, விவசாய பிரிவு துணைச் செயலாளர் சன்னியாசி, மாநில எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி துணைச் செயலாளர் விநாயகமூர்த்தி முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ரமேஷ் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் சேகர், சந்தோஷ், அரசு இளந்தேவன், தகவல் தொழில்நுட்ப மண்டல துணை செயலாளர் உமாசங்கர், திருக்கோவிலுார் நகர செயலாளர் சுப்பு உட்பட பலர் பங்கேற்றனர்.
Next Story