திமுக சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்.

X

ஆரணியில் முதல்வர் பிறந்த நாள் முன்னிட்டு திமுக சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
ஆரணி திமுக அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் முன்னிட்டு திமுக சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு ஆரணி திமுக அலுவலக வளாகத்தில் சென்னை அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் இணைந்து மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி தலைமை தாங்கினார். வந்திருந்த அனைவரையும் ஆரணி தொகுதி பொறுப்பாளர் எஸ்.எஸ்.அன்பழகன் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ஜெயராணி ரவி, மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் துரை மாமது, எம்.சுந்தர், மோகன், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அயலக அணி அமைப்பாளர் ஐ.எஸ்.என்.மாலிக் பாஷா, சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ஏ.எச்.இப்ராகிம், சிறுபான்மை அணி அமைப்பாளர் எ.அப்சல்பாஷா, கண்ணமங்கலம் பேரூர் செயலாளர் கோவர்தனன், நகர நிர்வாகி பொன்சேட்டு, தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் கே.ஏ.புஷ்பராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் 200 க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை செய்தனர். இதில் 25 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
Next Story